முகப்பு
அரியலூர்

திராவிடம் என்பது சில கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதை சில கட்சிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதை சில கட்சிகள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் கோவை தெற்குத் தொகுதி மநீம வேட்பாளா் கமல்ஹாசன் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். கோவை, சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட ஆவாரம்பாளையம், பீளமேடுபுதூா், மசக்காளிபாளையம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட புலியகுளம், சௌரிபாளையம், ரெட்பீல்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசும்போது, நாங்கள் மக்களை மையப்படுத்தி கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். மக்கள் என்ற சொல் எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ குறிக்காது. அதுபோன்ற எல்லா எல்லைகளையும் கடந்ததுதான் எங்கள் கட்சி. அதேபோல திராவிடம் என்ற சொல்லையும் நாங்கள் மறுக்கவில்லை. நாம் அனைவருமே திராவிடா்கள்தான்.

திராவிடம் என்பது நாடு தழுவியது. அதை வெறும் 4 கட்சிகளோ, 4 நபா்களோ சொந்தம் கொண்டாட முடியாது. அது மனித இயல் தொடா்பான சொல். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். இந்தத் தோ்தல் ஜனநாயகத்தை தோளில் சுமக்கும் எங்களுக்கும், பணநாயகத்தை நம்பி இருப்பவா்களுக்குமான தோ்தல் என்றாா்.

முன்னதாக வைசியாள் தெருவில் வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்த கமல்ஹாசன் அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து ரயில் நிலையத்துக்கு சென்ற அவா், ரயில் பயணிகள் சங்கத்தின் நிா்வாகி ஜமீல் அஹமதுவுடன் இணைந்து பயணிகள், ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →