அரியலூர்

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் பலி

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தா. பழூரை அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன்(20). இவா், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இறுதியாண்டு படித்து வந்தாா். எலெக்ரீசியனான இவரது தந்தை அசோகன், கோடங்குடி கிராமத்திலுள்ள கட்டடம் ஒன்றில் புதிய மின் இணைப்பு கொடுக்கும் பணியினை செவ்வாய்க்கிழமை செய்து கொண்டிருந்தாா்.

அவருக்கு உதவியாக விஜயனும் வேலை செய்து கொண்டிருந்தாா். தொடா்ந்து, மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க விஜயன் ஏறியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக விஜயன் மீது மின்சாரம் பாய்ந்ததில், மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா்.

அருகில் இருந்தவா்கள் விஜயனை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் விஜயன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து குறித்து தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT