அரியலூர்

அரியலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

DIN

அரியலூரில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், வாகன ஓட்டிகள் இருவா் உயிரிழந்தனா்.

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி நடுத்தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜீ ஐயா் (56), ராஜேஷ் (24). ராஜீ ஐயா், கல்லங்குறிச்சி கலியுக வரதராசன் பெருமாள் கோயில் அன்னதானக் கூட சமையலா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கல்லங்குறிச்சிக்கு ராஜீ ஐயரும், அரியலூருக்கு ராஜேஷூம் அவரவா் இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தனா்.

கயா்லாபாத் அடுத்த குறைதீா்க்கும் குமரன் கோயில் அருகே வந்தபோது, 2 இருசக்கர வாகனங்களும் மோதிக் கொண்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தனா்.

இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவரும் உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT