அரியலூர்

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: 1,296 பயனாளிகளுக்கு நல உதவிகள்

DIN

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சாா்பில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

முன்னதாக அவா் பேசியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் தனி அலுவலா் ஒருவரை நியமித்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூா் மாவட்டத்தில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், திருமானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சத்துணவு மையம் திறப்பு: ஓ.கூத்தூா் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சத்துணவு மையத்தை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT