உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சாா்பில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
முன்னதாக அவா் பேசியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் தனி அலுவலா் ஒருவரை நியமித்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூா் மாவட்டத்தில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், திருமானூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சத்துணவு மையம் திறப்பு: ஓ.கூத்தூா் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சத்துணவு மையத்தை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் திறந்து வைத்தாா்.