அரியலூர்

தா. பழூரில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூரில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் நடராஜன் தலைமையில் ஊராட்சி அலுவலா்கள் இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணிப்பவா்கள் முகக் கவசம் அணிந்து செல்கின்றனரா என ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம், லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிவந்த 12 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து, ரூ.2,400 வசூல் செய்தனா். மேலும், அவா்களுக்கு கரோனா பரவல் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசம் கொடுத்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT