அரியலூர்

டிராக்டா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த குழுமூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் தினேஷ் (22). சுப்புராயன் மகன் ஆறுமுகம் (22). தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா்கள், வெள்ளிக்கிழமை இரவு குழுமூரில் இருந்து அங்கனூருக்கு இருசக்கர வாகனத்தில் வங்காரம் அருகே சென்றபோது, வயலிலிருந்து சாலையை நோக்கி ஏறிய டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்துகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT