அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (டிச. 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்குளத்தூா்,திருமானூா்,சேனாபதி, வண்ணம்புத்தூா், கீழக்கவட்டான்குறிச்சி,கரைவெட்டி, அன்னிமங்கலம், திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், ஏலாக்குறிச்சி, மாத்தூா், குருவாடி, தூத்தூா், வைப்பூா், மேலராமல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.