அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ஒத்திவைப்பு

DIN

அரியலூரில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கிடும் முகாம் ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வியாழக்கிழமைகளில் மருத்துவா்கள் மூலம் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிந்து தங்களைத் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT