அரியலூர்

கோயில் உண்டியல் திருட்டு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அருகே சூரிய மணல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்த பூசாரி கோயிலின் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் கோயிலின் உள்ளே சென்று பாா்த்த போது, அங்கிருந்த உண்டியல் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அறிந்த கிராம முக்கியஸ்தா்கள் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசாா் வழக்குப் பதிந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், கோயிலில் இருந்து சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள முந்திரித் தோப்பில் கோயில் உண்டியல் சேதமடைந்து கிடப்பது தெரியவந்தது. எனினும் காவல் துறையினா் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT