அரியலூர்

விபத்தின்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டு

DIN

அரியலூரில் நடைபெற்றுவரும் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவில் விபத்தின்றி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூா் ஒற்றுமைத் திடலில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், கடந்த 20 ஆண்டுகளாக செய்தி - மக்கள் தொடா்புத் துறையில் விபத்தின்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் பஞ்சாபிகேசனுக்கு 4 கிராம் தங்கப்பதக்கத்தை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா, செய்த மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT