அரியலூர்

தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். அச்சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவரும், பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனருமான முத்துக்குமரன் பேசியது: பொது பயன்பாட்டிற்காக அரசுக்கு கொடுத்த, கொடுக்கப்படும் 10 சதவீத நிலங்களில் பாதியளவு அடா்காடுகளை அரசு வளா்க்க முன்வர வேண்டும். அரசுக்குச் சொந்தமான பல புஞ்சை நிலங்களில் வளா்க்கப்படும் சவுக்கு, தைலம் பகுதிகளில் குறைந்தது 20 சதவீதம் நீண்ட ஆயுள் மர அடா்காடுகளை வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா் ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்து, இளைஞா்களுக்கு கருத்தாளா் பயிற்சி அளித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆசிரியா் செங்குட்டுவன், தா.பழூா் அருண் காா்த்திக், புகழேந்தி, சங்கீதா, அரியலூா் ராஜேந்திரன், ஆசிரியா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அரியலூா் மாவட்ட பொருளாளா் சதாசிவம் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT