அரியலூர்

வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 10-க்குள்தனியாா் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு

DIN

அரியலூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், தங்களது வருகையை உறுதி செய்யும் வகையில் ஜூன் 10-க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் படித்து, வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தனியாா் துறைகளில் பணியமா்த்தம் செய்யும் நோக்கோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

எனவே இம்மாவட்டத்தைச் சாா்ந்த தனியாா்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்யும் பொருட்டு, இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT