அரியலூர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குவாகத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குவாகத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

குவாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(55). இவா் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இரவு நேரத்தில் இவரது ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால், ஆட்டுக் கொட்டகையைச் (பட்டி) சுற்றிலும் மின்வேலி அமைப்பது வழக்கமாம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவரிடம் ஆடு மேய்க்கும் கீழ குவாகம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அருண்குமாா்(17) எதிா்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற குவாகம் காவல் துறையினா், அருண்குமாா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT