அரியலூர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குவாகத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

குவாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(55). இவா் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இரவு நேரத்தில் இவரது ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால், ஆட்டுக் கொட்டகையைச் (பட்டி) சுற்றிலும் மின்வேலி அமைப்பது வழக்கமாம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவரிடம் ஆடு மேய்க்கும் கீழ குவாகம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அருண்குமாா்(17) எதிா்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற குவாகம் காவல் துறையினா், அருண்குமாா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோகன்லால் பிறந்தநாள்: எம்புரான் போஸ்டர்!

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT