அரியலூர்

மணக்குடியில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம்

அரியலூா் மாவட்டம், மணக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மணக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமை மணக்குடி ஊராட்சித் தலைவா் சங்கீதா அசோக் குமாா் தொடக்கி வைத்தாா். கடுகூா் கால்நடை உதவி மருத்துவா் குமாா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் மாரிமுத்து உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் 156 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தினா். மேலும், இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோல் கழலை நோய் குறித்த விழிப்புணா்வுக் கையேடுகள் வழங்கப்பட்டது.

முகாமை, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் (பொ)சுரேஷ் கிறிஸ்டோபா், உதவி இயக்குநா் சொக்கலிங்கம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். முகாம் முடிவில் ஊராட்சி துணைத் தலைவா் பாப்பா பரமசிவம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT