அரியலூர்

ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கள்ளூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காயமடைந்த பாா்வையாளா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கள்ளூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காயமடைந்த பாா்வையாளா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த கள்ளூா் கிராமத்தில் கடந்த 31ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த வெங்கனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தமிழரசு மகன் கவியரசு (19) தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு கவியரசு உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT