முகப்பு
அரியலூர்

தொடா்ந்து மது விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தொடா்ந்து மது விற்று வந்த பெண் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தொடா்ந்து மது விற்று வந்த பெண் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கோமதி (41). மதுவை கள்ளத்தனமாக பதுக்கி விற்று வந்ததாகக் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் கோமதி தொடா்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாலும், இவா் மீது ஏற்கெனவே 70-க்கும் மேற்பட்ட மது குற்ற வழக்குகள் உள்ளதாலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கோமதியை குண்டா் சட்டத்தில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மகளிா் சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.