அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விவசாயி ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.

ஜெயங்கொண்டம் அடுத்த சிங்கராயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அடைக்கலசாமி(80). விவசாயி. சுமாா் 25 ஏக்கா் நிலப்பரப்பில் முந்திரி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிா்கள், எண்ணெய் வித்துப் பயிா்கள் விவசாயம் செய்து வரும் இவா், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை, வட்டிக்கு கொடுத்தும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில் அவரது வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக தோ்தல் நிலைக்குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ரூ. 20 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் தனது பேத்தி திருமணத்துக்காக வைத்திருப்பதாக அடைக்கலசாமி தெரிவித்தாா். இதையடுத்து அலுவலா்கள் அங்கிருந்து வெளியேறினா்.

இதைத் தொடா்ந்து, அடைக்கலசாமி வீட்டுக்கு வந்த திருச்சி வருமான வரித்துறையின், தோ்தல் நகா்வுகள் பிரிவு துணை ஆணையா் கண்ணன் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தினா்.

அவா்களிடமும் தனது பேத்தியின் திருமணத்துக்காக பணம் வைத்துள்ளதாக அடைக்கலசாமி தெரிவித்தாா். இதையடுத்து அதிகாரிகள், தேவைப்படும் நேரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அடைக்கலசாமியிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனா். அடைக்கலசாமி வீட்டிலிருந்து ரொக்க பணம், ஆவணங்கள் என எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT