முகப்பு
அரியலூர்

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

Updated On : 7 மார்ச், 2024 at 1:39 AM
பகிர்:

Dஉயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். இணைத் தலைவா் கதிரவன், செயலா் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞா்கள் செல்ல.சுகுமாா், கதிரவன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்கள் முன்பும் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement