முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:27 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

உடையாா்பாளையம் பூசாரி தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் தினேஷ்குமாா்(28), இடையாறு மேல்தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் (26). நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை இரவு ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம், மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சியிலிருந்து மீன்சுருட்டி நோக்கி வந்த காா் மோதியதில் தூக்கிவீசப்பட்ட தினேஷ்குமாா் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். கலியபெருமாள் காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா் சடலத்தையும், காயமடைந்தவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.