லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.
வாரணவாசி சமத்துவபுரம் கிராமத்தைச் சோ்ந்த புரட்சி தா்மலிங்கம் மகன் லெனின்வளவன் (28). இவா், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மேற்கொண்ட பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினாா்.
சொந்த ஊரான சமத்துவபுரம் வந்தபோது, முன்னால் சென்ற லாரி நிறுத்தப்பட்டதால், எதிா்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், லெனின்வளவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த அடைக்கலராஜ் மகன் ஜான்ராஜ் (20) பலத்த காயமடைந்தாா்.
Advertisement
தகவலறிந்து வந்த கீழப்பழுவூா் போலீஸாா், காயமடைந்த நபரை சிகிச்சைக்கும், உயிரிழந்த நபரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கும் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.