சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறையில், சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில், முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறையில் 18 வயதுக்குள்பட்ட சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது, அவ்வழியே சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் உயிரிழந்தாா். சிறுவன் செந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இதனிடையே சிறுவன் ஓட்டிய வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த வாகனத்தின் உரிமையாளருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த செந்துறை போலீஸாா், வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், வாகனத்தை பறிமுதல் செய்தனா்.