அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 21 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் 21 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் 21 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்ததாவது:

ஓலையூா், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஸ்ரீராமன், அய்யூா், விளந்தை, காடுவெட்டி, சுத்துக்குளம், பிள்ளைபாளையம், கங்கைகொண்ட சோழபுரம், தென்னவநல்லூா், கோடாலிகருப்பூா், சோழமாதேவி, இடங்கண்ணி, தா.பழூா், தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, அறங்கோட்டை, படைவெட்டிக்குடிக்காடு ஆகிய 21 கிராமங்களில் ஜன.23-ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

எனவே, விவசாயிகள் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நெல் கொள்முதல் நிலையத்தில் அளித்து பதிவு செய்து, தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்து பயனடையலாம்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT