உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஞாயிற்றுக்கிழமை கையடக்கக் செயற்கைக்கோள் கண்டுபிடித்த பள்ளபட்டி இளம்விஞ்ஞானி ரிபாத் சாருக்கின் இல்லத்துக்கு வருகை தந்த நிலையில், அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பள்ளப்பட்டியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரிபாத் சாருக்கின் இல்லத்துக்குச் அப்பகுதியினருடன் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் குழுவினர் திங்கள்கிழமை (ஜூலை 17) ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அப்பகுதியினர் மேற்கொண்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் அபுதாகீர், பள்ளபட்டி கல்வி அறக்கட்ட ளை துணை தலைவர் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.