கரூர்

இருசக்கர வாகனம் மீது  டிராக்டர் மோதல்: இளைஞர் சாவு

DIN

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
 கரூர் மாவட்டம்,  குளித்தலையை அடுத்த சிவாயம் இந்திரா காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவா(25).  இவர் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பனிக்கம்பட்டி-அய்யர்மலை சாலையில் ரமேஷ் என்பவரது தோட்டம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT