கரூர்

சாலையில் தடுமாறி விழுந்த தொழிலாளி சாவு

DIN

கரூர் ராயனூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (51). இவர், திருப்பூரில்
ஜவுளித்தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். சனிக்கிழமை திருப்பூரில் இருந்து கரூர் வந்த அவர், கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து ராயனூர் செல்லும் பேருந்தில் ஏறி, நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் செல்லும் போது, போதையில் தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT