முகப்பு
கரூர்

சர்வதேச அறிவியல் வார விழா: வெள்ளியணை அரசுப் பள்ளி தேர்வு

சர்வதேச அறிவியல் வார விழாவிற்கு வெள்ளியணை அரசுப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

சர்வதேச அறிவியல் வார விழாவிற்கு வெள்ளியணை அரசுப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 சென்னை அண்ணா பல்கலை.யில் அக். 13 ஆம் தேதி முதல் 16 வரை அறிவியல் கிராமம் என்ற சர்வதேச அறிவியல் வாரவிழா நடைபெற உள்ளது. இதில், பங்கேற்ற கரூர் மக்களவைத் தொகுதி சார்பில் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ச.ஹரிகரன், வெ.சரண், ஆ.லோகேஷ், ர.தீபக்கண்ணன் ஆகியோரும்,  வழிகாட்டி ஆசிரியராக பெ.தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அறிவியல் வார விழாவில், வெள்ளியணை ஊராட்சியைச் சேர்ந்த 13 கிராமங்களின் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை, பரப்பளவு, ஏரிகள், குளங்கள், கிணறுகளின் எண்ணிக்கை,  விளையும் பயிர், குடகனாற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு நீர்வரும் கால்வாயை அகலப்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்கள், காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வெள்ளியணை பெரிய குளத்திற்கு நீர் கொண்டு வருதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களை அப்பள்ளி மாணவர்கள் கூற உள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணனை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் சி.தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அ.கருப்பண்ணன், வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →