கரூர்

குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவர் கைது

DIN

குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). இவரது மனைவி இந்திராணி (33). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களாக கணவரும், மனைவியும் அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்திராணியை தகாத வார்த்தையால் சுரேஷ்குமார் திட்டினாராம். இதையடுத்து, அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை சுரேஷ்குமார் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து இந்திராணி அளித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT