கரூர்

பைக் - டேங்கர் லாரி மோதல்: ஒருவர் சாவு, இருவர் காயம்

DIN

கரூர் ஆண்டாங்கோவில் வடிவேல்நகரைச் சேர்ந்தவர்  வீரமணி(42). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கோவை - கரூர் சாலையில்  ரெட்டிப்பாளையம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி மோதியது.
பின்னர் அந்த லாரி சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. 
இதில் வீரமணி மற்றும் சாலையோரம் நின்றிருந்த லாரி ஓட்டுநர் கோவை போத்தனூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(39), டேங்கர் லாரியை ஓட்டிவந்த  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த சாலியமங்கலத்தைச் சேர்ந்த அண்ணாமலை கண்ணன்(36) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இதில் வீரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT