கரூர்

மணவாடியில்  வீடு புகுந்து நகை திருடியவர் கைது

DIN

மணவாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், மணவாடி பெருமாள்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல். கடந்த 10-ம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் ஜவஹர்பஜாருக்குச் சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒன்னரை பவுன் நகையை  திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை சக்திவேல் வீட்டில் நகை திருடியதாக தாந்தோணிமலை தென்றல் நகரைச் சேர்ந்த விஜயராஜ் மகன் ரத்தினகிரீஸ்வரன் (24) என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT