கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணை மின் நிலையத்தில் வரும் புதன்கிழமை (டிச.19) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகிக்கப்படும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.