கரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேற்குபிரதட்சணம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி அருக்காணியம்மாள் (70).
இவர் அதே பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று திரும்பியபோது பின்னால் வந்த 30 வயதுள்ள இரு பெண்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து மூதாட்டி வீட்டுக்குள் சென்றபோது பின்னால் சென்ற பெண்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியின் 12 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.