க. பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமை வகித்தார்.
உதவித் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி. மாரிமுத்து,கிராம கல்விக் குழு தலைவர் குணசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் து.ரா. பெரியதம்பி ஆகியோர் பேசினர். ஈரோடு நந்தா கல்லூரிப் பேராசிரியர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.