கரூர்

மாநில தடகளப் போட்டிக்கு கரூர் பள்ளி மாணவர்கள் தேர்வு

DIN


மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் கரூர் மாவட்டம் சார்பில் பங்கேற்று 14 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் 100மீ., 200மீ., 400மீ., 600 மீ., ஓட்டப் பந்தயம் மற்றும் 800 மீ. தடை தாண்டுதல் மற்றும் 400 மீ. தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதலிடமும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 800மீ., 1500மீ., ஓட்டத்தில் முதலிடமும் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் 100மீ, 200மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 200மீ., 800மீ, 1500 மீ., 3,000மீ., ஓட்டப்போட்டியில் முதலிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 100மீ., 200மீ., வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். மேலும் 14 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் மாணவர் எம்.தீபன்ராஜ், மாணவிகள் பிரிவில் பி.கனீஷ்கா ஆகிய இருவரும் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை சேரன் பள்ளிகளின் தலைவர் பிஎம்.கருப்பண்ணன், தாளாளர் பிஎம்கே.பாண்டியன், நிர்வாகி பிஎம்கே.பெரியசாமி, ஆலோசகர் பி.செல்வதுரை, பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT