கரூர்

திறந்திருந்த வீட்டினுள் புகுந்து 46 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

DIN

கரூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து 46 பவுன் தங்கநகை, ரூ.50,000 திருடப்பட்டது.
கரூர் ராமாகவுண்டன்புதூரைச் சேர்ந்த பாலுசாமி அப்பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
சனிக்கிழமை அவர் வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி பாப்பாத்தி(45) பிற்பகலில் வீட்டின் கதவைத் திறந்து வைத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த லட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள் சென்ற போது பீரோ திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை பார்த்த போது அதில் இருந்த 46 பவுன் தங்க நகை, 75 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.50,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5.10 லட்சம் எனக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தில் பாப்பாத்தி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT