கரூர் அன்னை வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை கொலு வைத்து வழிபாடு நடைபெற்றது.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளித் தாளாளர் ஆர். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணர், சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து வந்து பங்கேற்றனர்.
பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.