ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் கோவைச் சாலையில் தொடங்கிய பேரணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில செய்தித் தொடர்பாளர்கள் ஜோதிமணி, திருச்சி வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சின்னசாமி வரவேற்றார்.
பேருந்துநிலைய ரவுண்டானா, ஜவஹர்பஜார் வீதி வழியாகச் சென்ற பேரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு ரஃபேல் போர் ஊழலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், பொதுச் செயலாளர் சுரேகா பாலசந்தர், நகரத் தலைவர் சௌந்தரராஜன், வட்டாரத் தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், மாநில
விவசாயப் பிரிவு செயலாளர் ராஜ்குமார் உள்பட திரளான கட்சியினர் பங்கேற்றனர்.