கரூர்

பள்ளி மாணவர்களுக்கு புத்தகச் சேமிப்பு உண்டியல்

DIN


ஆண்டாங்கோவில்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  மாணவர்களுக்கு புத்தகச் சேமிப்பு உண்டியல் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விரைவில் அறிவியல் இயக்கம் சார்பில் கரூரில் மூன்றாவது புத்தகத்திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு இப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்கப் பணம் சேமிக்கும் வகையில் அவர்களுக்கு உண்டியல் வழங்கும் விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித்தலைமை ஆசிரியர் கண்மணி தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்களை புத்தகத் திருவிழா குழுத்தலைவர் பிடி. தங்கராஜ் வழங்கி புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். 
அறிவியல் இயக்கச் செயலர் ஜான்பாட்ஷா, ஆசிரியர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT