கரூர்

சின்னதாராபுரத்தில் ஆதிபராசக்தி மன்ற விழா

DIN

சின்னதாராபுரம் வடக்கு ஆதிபராசக்தி மன்றம் சார்பில் நடைபெற்ற கஞ்சிக் கலய விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் வடக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர விழாவையொட்டி தென்னிலை நெடுஞ்சாலையில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சிக்கலய விழா அண்மையில் நடைபெற்றது.  தொடர்ந்து கஞ்சிக்கலய ஊர்வலம் நடைபெற்றது. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.  பேருந்து நிலையம் வரை ஊர்வலம் சென்று மீண்டும் வழிபாட்டு மன்றக் கோயிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக கஞ்சிக்கலயம், அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி கொண்டு சென்றனர். பிறகு வேள்வி பூஜை நடத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.  அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT