கரூர்

புகையிலை பொருள் விற்பனை: முதியவர் கைது

DIN

கரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் செல்லாண்டிபாளையத்தில் சுப்ரமணி(67) என்ற முதியவர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சத்யபிரியா தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சுப்ரமணி வீட்டில் ரூ.4,410 மதிப்பில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக சுப்ரமணியை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

SCROLL FOR NEXT