கரூர்

மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க தொடக்க விழா

DIN

கரூர் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் 23ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கெளரவத் தலைவர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணைத்தலைவர்கள் ரத்தினாசலம், பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எம்.சின்னசாமி ஆண்டு வரவு செலவு அறிக்கையினை தாக்கல் செய்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீதரன் மற்றும் பொதுச்செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT