கரூர்

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

DIN

கரூரில் வீடு புகுந்து  நான்கரை பவுன் நகையை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் கிழக்கு தாந்தோணிமலை கருப்பகவுண்டன்புதூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (51). இவர் சனிக்கிழமை காலை  கரூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்தினருடன் சென்று இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
உள்ளே சென்றபோது பீரோவை உடைத்து நான்கரை பவுன் நகையை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்து விசாரித்ததில் நகை திருடியதாக கரூர் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT