கரூர்

வீட்டின் பூட்டை உடைத்து 12.5 பவுன் நகை திருட்டு

DIN

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12.5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறந்ததால் குடும்பத்தினருடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 12.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.  புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT