பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான கடைசி நாள் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் நடைபெற்று வரும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு சேவை மையம் கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதல் மே 2 முதல் செயல்படுகிறது.
இந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் அடங்கிய வழிகாட்டி புத்தகங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ஜூலை 3தி முதல் 28-ஆம் தேதி முடிய நடைபெறவிருக்கும் இணையவழி விருப்பத்தேர்வு மற்றும் தேர்வினை உறுதி செய்தல் போன்றவற்றினை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது சேவை மையத்திலோ செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய https://www.tneaonline.in அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
அரசு கலைக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் தங்கதுரை, பேராசிரியர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.