கரூரில் தமிழறிஞர் து.ரா.பெரியதம்பி எழுதிய கதம்பம் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவிற்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ஆசிரியர் மா. காமராசு வரவேற்றார். இதில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழனியப்பன் நூலை திறனாய்வு செய்து பேசினார். விழாவில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட்டு பேசினார். தமிழறிஞர் க.நா.சதாசிவம் நன்றி கூறினார். து.ரா.பெரியதம்பி ஏற்புரையாற்றினார். விழாவில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.