கரூர்

பைக் மோதி தொழிலாளி சாவு

DIN

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். 
தோகைமலை அருகே கொசூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (57).  கூலித்தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இரவு கொசூரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு தோகைமலை - பாளையம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். 
அவர் ஆத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தோகைமலை போலீஸார் கொசூர் கஸ்பாவைச் சேர்ந்த திருமுடி மகன் ஆறுமுகம் (27) என்ற இளைஞர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT