கரூர்

முதல்வர் இன்று அரவக்குறிச்சியில் பிரசாரம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

DIN


தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி,  ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வருகிறார். இதையடுத்து,  சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டுக்குச்  செல்கிறார். அங்கு மதிய உணவை முடித்துவிட்டு, பகல் 2 மணிக்கு மேல் கார் மூலம் அரவக்குறிச்சி செல்கிறார்.  
அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT