கரூர்

பேருந்து மோதியதில் விவசாயி பலி

DIN

இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டளையைச் சேர்ந்தவர் மாயவன்(39); விவசாயி. இவர் வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாயவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார்  தனியார் பேருந்து ஓட்டுநரான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாதனூரைச் சேர்ந்த தமிழ்செல்வன்(31) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT