கரூர்

விவசாயி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

DIN

தோகைமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச் சென்றனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனி (52), விவசாயி. இவரது மனைவி சித்ரா(47). செவ்வாய்க்கிழமை காலை பழனி வழக்கம்போல தோட்டத்திற்கும், சித்ரா 100 நாள் வேலைக்கும் சென்றுவிட்டார்.  
மேலும் தம்பதியர்களின் மகன் நந்தகுமார் திருச்சியில் தான் பயிலும்  கல்லூரிக்கும் சென்றுவிட்டார்.  
இந்நிலையில் பிற்பகல் 2 மணியளவில் சாப்பிட பழனி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.55,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT