கரூர்

முதியவரை தாக்கிய தம்பதியர் மீது வழக்குப்பதிவு

DIN


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கீழடை பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(80). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதகவி(51) என்பவருக்கும் இடையே, வீட்டின் அருகே பொதுவழியை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருதகவியும், அவரது மனைவி ஆனந்தி(45) என்பவரும் சேர்ந்து ரெங்கசாமியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கசாமி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரெங்கசாமி அளித்த புகாரின்
பேரில் மாயனூர் போலீஸார் மருதகவி, ஆனந்தி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT