கரூர்

தீக்காயமடைந்த மாணவி உயிரிழப்பு

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகிலுள்ள சோனதாசன்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகள் செளந்தா்யா (16). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த 12- ஆம் தேதி வீட்டின் முன்பிருந்த எறும்புக் குழியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக செளந்தா்யா உடலில் தீப்பற்றியது. பலத்த காயங்ளுடன் கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT